செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பர்கூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி போடிப்பாறை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜ் (வயது 19) என்பவர், கடந்த 10-ந் தேதி இரவு சாக்லெட் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நேற்று பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து நடராஜை, போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி போடிப்பாறை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜ் (வயது 19) என்பவர், கடந்த 10-ந் தேதி இரவு சாக்லெட் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நேற்று பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்குப்பதிவு செய்து நடராஜை, போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.