செய்திகள்
பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிபாளையம்:
தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், சூழலியல் வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரியும் பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.