செய்திகள்
கந்தம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
கந்தம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:
பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தம்பூண்டி கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள். குணசேகரன் சீட்டு பணம் குறித்து மாரியம்மாளிடம் கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாரியம்மாள் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.