செய்திகள்
மிரட்டல்

மோகனூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

Published On 2020-08-12 15:23 GMT   |   Update On 2020-08-12 15:23 GMT
மோகனூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி ஊராட்சி சின்னக்கரசபாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன்கள் பாரதி (வயது 55), பசுபதி (47). இவர்களுக்கு எஸ்.வாழவந்தியிலிருந்து பாலப்பட்டிக்கு செல்லும் வழியில் விவசாய தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதுகுறித்து பாரதி, பசுபதி அவர்களிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாரதி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கீழபாலப்பட்டியை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பின்னர் நரேஷ்குமார் (25), தன்ராஜ் (24) மற்றும் 19 வயது வாலிபர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News