செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-08-12 07:29 GMT   |   Update On 2020-08-12 07:29 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும். கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக  நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 11, வால்பாறையில் 9, தேவலாவில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News