செய்திகள்
புகார்

திருவையாறு அருகே பெண் மரணத்தில் மர்மம் உள்ளதாக தாய் புகார்

Published On 2020-08-12 00:10 GMT   |   Update On 2020-08-12 00:10 GMT
திருவையாறு அருகே பெண் சாவில் மர்மம் உள்ளதாக தாய் போலீசில் புகார் அளித்தார். இதனால் பெண்ணின் உடல் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வைரவன் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நந்தகோபால். இவருடைய மனைவி உஷாராணி(வயது35). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட உஷாராணி பசுபதிகோவிலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உஷாராணி 10-ந் தேதி இரவு 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைத்தொடர்ந்து வைரவன்கோவிலுக்கு உஷாராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்தநிலையில் உஷாராணியின் தாய் கனகவல்லி தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைரவன்கோவிலுக்கு சென்று உஷாராணியின் உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News