செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. .
தென்காசி:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,964 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,232 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்து 205 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.