செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி - நேற்று ஒரே நாளில் 84 பேருக்கு தொற்று

Published On 2020-08-11 09:08 GMT   |   Update On 2020-08-11 09:08 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், எண்ணிக்கை 4 ஆயிரத்து 564 ஆக உயர்ந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 4 ஆயிரத்து 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 702 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த 70 வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரானாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்தது.

நேற்று 500 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் புதிதாக 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரானாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 4 ஆயிரத்து 564 ஆக உயர்ந்தது.
Tags:    

Similar News