செய்திகள்
சென்னை-அரக்கோணம் ரெயில்

சென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே

Published On 2020-08-11 03:06 GMT   |   Update On 2020-08-11 03:54 GMT
சென்னையில் இன்று, நாளை 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி தெற்கு ரெயில்வே சோதனை மேற்கொள்கிறது.
சென்னை:

தெற்கு ரெயில்வே கூறியிருப்பதாவது:

சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரெயில்கள் 143 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம்.

சோதனை ஓட்டத்தில் தண்டவாள பாதைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News