செய்திகள்
தற்கொலை

திருவேற்காட்டில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2020-08-10 21:07 GMT   |   Update On 2020-08-10 21:07 GMT
திருவேற்காட்டில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:

திருவேற்காடு, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் பிரவீன்(வயது 20). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பிரவீன், பின்னர் மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.

ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், மாடிக்கு சென்று பார்த்தனர்.

அங்குள்ள அறையில் பிரவீன், தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News