செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

Published On 2020-08-10 09:52 GMT   |   Update On 2020-08-10 09:52 GMT
மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முன்கள பணியாளர்களான மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ஆளாகி வருகிறார்கள். இதே போல் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்கள். இதே போல் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ.வும் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியானதை அடுத்து சரவணன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான எம்.பி., எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News