செய்திகள்
கோப்புப்படம்

கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி

Published On 2020-08-10 09:26 GMT   |   Update On 2020-08-10 09:26 GMT
கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து குதிரை பலியானது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). இவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) திருமணம் நடத்துவதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை லட்சுமணன், தனது தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத லட்சுமணன், சோலார் மின்வேலியை தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் கொடைக்கானல் வில்பட்டி அருகே பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 3 குதிரைகளை விவசாய பணிக்காக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த குதிரைகளை தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அப்போது தோட்டத்திற்கு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவரது குதிரை ஒன்று மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த குதிரை இறந்துபோனது.
Tags:    

Similar News