செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-08-10 06:42 GMT   |   Update On 2020-08-10 06:42 GMT
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, தேனி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர், புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேவாலாவில் 12, ஏற்காட்டில் 10, வால்பாறையில் 9, சின்னக்கல்லாரில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News