செய்திகள்
கோவை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
கோவை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
சரவணம்பட்டி:
கோவை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இது குறித்து கோவை மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவராக ரங்கராஜ், பொருளாளராக சிவராமன், துணை செயலாளர்களாக கோவிந்தராஜ், பொன்ராஜ், சண்முகவடிவேல், சத்தியவதி, செயற்குழு உறுப்பினர்களாக கேசவன், பாபு, பொதுக் குழு உறுப்பினர்களாக ராகவலிங்கம், செல்வலிங்கம், பழனி, தீனதயாளன், முத்துக்குமரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சாய்பாபா காலனி பகுதி பொறுப்பாளராக ராஜா, கணபதி பகுதி பொறுப்பாளராக ராமசாமி, சவுரிபாளையம் பகுதி பொறுப்பாளராக கிருஷ்ணமூர்த்தி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளராக கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கோவை மாநகர் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் கோபி கண்ணன், சவுரிபாளையம் பகுதி செயலாளர் தீனதயாளன், கணபதி பகுதி செயலாளர் லக்கிகுட்டி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.