செய்திகள்
சென்னை போலீசில் புதிதாக 20 பேருக்கு கொரோனா - 12 பேர் குணம் அடைந்தனர்
சென்னையில் நேற்று புதிதாக 20 போலீசார் கொரோனா பிடியில் சிக்கினர். இதன் மூலம் தொற்று பாதிப்பு 1,836 ஆக அதிகரித்தது.
சென்னை:
கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள போலீசாரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை போலீசில் நேற்று முன்தினம் வரை 1,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று புதிதாக 20 போலீசார் கொரோனா பிடியில் சிக்கினர். இதன் மூலம் தொற்று பாதிப்பு 1,836 ஆக அதிகரித்தது. கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும், அதில் இருந்து போலீசார் வேகமாக குணம் அடைந்து வருகின்றனர். அதன்படி இதுவரையில் 1,465 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதில் நேற்று 12 போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பினர்.
கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள போலீசாரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை போலீசில் நேற்று முன்தினம் வரை 1,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று புதிதாக 20 போலீசார் கொரோனா பிடியில் சிக்கினர். இதன் மூலம் தொற்று பாதிப்பு 1,836 ஆக அதிகரித்தது. கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும், அதில் இருந்து போலீசார் வேகமாக குணம் அடைந்து வருகின்றனர். அதன்படி இதுவரையில் 1,465 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதில் நேற்று 12 போலீசார் குணம் அடைந்து பணிக்கு திரும்பினர்.