செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவாரூரில் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Published On 2020-08-09 09:04 GMT   |   Update On 2020-08-09 09:04 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
திருவாரூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.  ஏற்கனவே 1,947 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,001 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News