செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-08-08 10:55 GMT   |   Update On 2020-08-08 10:55 GMT
திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை மாதவரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தொடர் பரிசோதனை மையங்களை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள திமுகவினருக்கு நிழல் கொடுக்கும். திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

கு.க செல்வம் கட்சியில் இருந்து விலகியது உள்கட்சி விவகாரம். திமுகவின் முதல் விக்கெட் கு.க செல்லம். துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு தான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் அவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றார்.
Tags:    

Similar News