செய்திகள்
கோப்புபடம்

கொடைரோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-08-08 08:14 GMT   |   Update On 2020-08-08 08:14 GMT
கொடைரோடு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:

கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் கிருத்திகா (வயது 27). இவருக்கும் மட்டப்பாறை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாண்டியராஜ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பு பாண்டியராஜூம், கிருத்திகாவும் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. மேலும் வரதட்சணை கேட்டும் மனைவியை பாண்டியராஜ் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருத்திகா கட்டக்கூத்தன்பட்டியில் உள்ள தனது தந்தைவீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கிருத்திகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News