செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-08 08:01 GMT   |   Update On 2020-08-08 08:01 GMT
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய சமூக நல ஆணையர் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமையிலும், நல்லம்பள்ளியில் வட்ட தலைவர் சந்திரன், பென்னாகரத்தில் வட்ட செயலாளர் பெருமாள், காரிமங்கலத்தில் வட்டதலைவர் முருகேசன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டியில் வட்ட தலைவர் சண்முகம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு சங்க நிர்வாகி சிவமணி, பாலக்கோட்டில் மாவட்ட இணைசெயலாளர் குணசேகரன்,அரூரில் வட்டதலைவர் சுதாகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். 

இந்த ஆர்ப்பாடங்களில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இணை செயலாளர் காவேரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், நூலகத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் பிரபாகரன், வட்டசெயலாளர் முனிரத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Tags:    

Similar News