செய்திகள்
கெலமங்கலம் அருகே கோவில்களில் திருடிய 2 வாலிபர்கள் கைது
கெலமங்கலம் அருகே கோவில்களில் திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்டனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு நடந்தது. இதில் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருட்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
இதில் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணித்ததில் கோவில்களில் திருடியது அந்த பகுதியில் உள்ள பாஞ்சாலி நகரைச் சேர்ந்த சத்யா (வயது 22), திருப்பத்தூர் அருகே உள்ள நாராயணன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (22) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்டனர்.