செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

19-ந்தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்தவேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

Published On 2020-08-07 13:05 GMT   |   Update On 2020-08-07 13:05 GMT
ஆராய்ச்சி மாணவர்கள் 19-ந்தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்தவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., எம்.எஸ். போன்ற ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதற்கான கட்டணத்தை ஆராய்ச்சி மாணவர்கள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதிக்குள் செலுத்தவேண்டும்.

வருகிற 19-ந்தேதிக்குள் கட்டணத்தை செலுத்த தவறும் மாணவர்கள் செப்டம்பர் 2-ந்தேதிக்குள் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு மேலும் கட்டணத்தை செலுத்தாத ஆராய்ச்சி மாணவர்களின் பதிவு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News