செய்திகள்
இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

உடல்நலக்குறைவால் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்

Published On 2020-08-06 15:31 GMT   |   Update On 2020-08-06 15:31 GMT
தர்மபுரி அருகே உடல்நலக்குறைவால் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 43). இவருடைய 19 வயது மகள் பென்னாகரம் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அந்த இளம்பெண்ணும், வாலிபரும் மாயமானார்கள். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவகாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகம் முன்பு திரண்ட உறவினர்கள் புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தாமல் அலைக்கழிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிவகாமி இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது புகார் குறித்து உரிய விசாரணை நடத்தாத போலீசாரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த மறியலால் அந்த பகுதியில் 3 மணிநேரத்திற்கும் மேல் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News