செய்திகள்
கோப்புபடம்

பதிவு திருமணம் செய்த காதலியை மீட்டு தாருங்கள் - போலீஸ் சூப்பிரண்டிடம், என்ஜினீயர் புகார்

Published On 2020-08-06 15:01 GMT   |   Update On 2020-08-06 15:01 GMT
சேந்தமங்கலம் அருகே பதிவு திருமணம் செய்த காதலிக்கு வேறு நபருடன் நிச்சயதார்த்தம் செய்ததாகவும், அவரை மீட்டு தருமாறும், போலீஸ் சூப்பிரண்டிடம் என்ஜினீயர் புகார் தெரிவித்துள்ளார்.
சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூவரசன் (வயது 28). என்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கும் அவர்களது காதல் தொடர்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த காதல் ஜோடி அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர். பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த காதல் ஜோடியினர் தங்களது சொந்த ஊரான பழையபாளையத்திற்கு திரும்பினர். அங்கு அவரவர் பெற்றோர் வீட்டில் இருந்தவாறே வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் தனது காதலன் மூவரசனுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தார். மேலும், தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மூவரசன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

அதில், நானும், எனது ஊரை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் அவரது பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். எனவே எனது காதலியை மீட்டு தரவேண்டும். மேலும் எங்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News