செய்திகள்
முக ஸ்டாலின்

மக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை - மு.க.ஸ்டாலின்

Published On 2020-08-06 07:57 GMT   |   Update On 2020-08-06 07:57 GMT
மக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் புரோக்கர்கள் மூலமாக இ பாஸ் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படுவதாகவும் சமீப காலமாக பரவலாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில்,  தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை இனி தேவையில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத் தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது. திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News