செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா: 112 பேர் பலி

Published On 2020-08-05 12:48 GMT   |   Update On 2020-08-05 12:48 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 112 (அரசு மருத்துவமனையில் 84 பேர், தனியார் மருத்துவமனையில் 84 பேர்) உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் 4461 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 61,166 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 59,156 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News