செய்திகள்
ஆர் சுபாஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் நியமனம்

Published On 2020-08-05 12:12 GMT   |   Update On 2020-08-05 12:12 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நாதன்காடுவெட்டி ஆர்.சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நாதன்காடுவெட்டி ஆர்.சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, மாவட்ட செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சுபாஷ் என்கிற ஜெயச்சந்திரனை கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News