செய்திகள்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை

Published On 2020-08-05 08:15 GMT   |   Update On 2020-08-05 08:15 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ததில் நலமுடன் உள்ளதாகவும் 7 நாள் தனிமைப்படுத்தப்படவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று ஆளுநர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிகுறிகள் இன்றி நலமுடன் இருக்கும் ஆளுநரை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News