செய்திகள்
தமிழக ராஜ் பவன்

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: ராஜ் பவன்

Published On 2020-08-03 14:47 GMT   |   Update On 2020-08-03 14:47 GMT
ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை தனியார் மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘‘ஆளுநர் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையை தனியார் மருத்துவமனையின் மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அன்று மாலையில் நடைபெறும் தேனீர் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News