செய்திகள்
பாபநாசம் தபால் நிலையம் முன்பு மனுக்கள் அனுப்பும் போராட்டம்
பாபநாசம் தபால் நிலையம் முன்பு சமூக இடைவெளியுடன் மனுக்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தாராவ் வழிகாட்டுதலின் பேரில் (தகவல் உரிமை சட்டம் ஆர்வலர்கள் அமைப்பு) பாபநாசம் தபால் நிலையம் முன்பு சமூக இடைவெளியுடன் மனுக்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மகா பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் அறிவழகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 100 தகவல் உரிமை பெறும் மனுக்களை அனுப்பி வைத்தனர்.