செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா

Published On 2020-08-02 22:06 GMT   |   Update On 2020-08-02 22:06 GMT
சென்னையில் புதிதாக 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15 பேர் கொரோனா பிடியில் சிக்கினர். இதையடுத்து மொத்த தொற்று பாதிப்பு 1,720 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை:

கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாரும் தொற்று தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 1,705 போலீசார் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் புதிதாக 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15 பேர் கொரோனா பிடியில் சிக்கினர். இதையடுத்து மொத்த தொற்று பாதிப்பு 1,720 ஆக அதிகரித்து உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து போலீசார் விரைவில் மீண்டு வருகிறார்கள். அதன்படி 5 போலீசார் குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினர். இதுவரையில் 1,332 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.
Tags:    

Similar News