செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் வழங்கப்பட்டது

பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்

Published On 2020-08-01 14:32 GMT   |   Update On 2020-08-01 14:32 GMT
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் கலந்து கொண்டு 150 பேருக்கு முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News