செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

Published On 2020-08-01 06:19 GMT   |   Update On 2020-08-01 06:19 GMT
பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் வாரச்சந்தை அருகே திடீரென குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் போயர் தெருவில் கடந்த சில நாட்களாக தெருக்குழாயில் குடிநீர் வரவில்லை. இதனை தொடர்ந்து அந்தப்பகுதி மக்கள் நேற்று பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் வாரச்சந்தை அருகே திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபிரபு, ஊராட்சி செயலாளர் ரவி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும் உடனடியாக போயர் தெருவில் உள்ள பைப்லைன் சீரமைக்கப்பட்டு குடிநீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News