செய்திகள்
விபத்து பலி

மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2020-07-31 11:17 GMT   |   Update On 2020-07-31 11:17 GMT
மரத்தில் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ் (வயது 34), நாகராஜ் (27). இவர்கள் இருவரும் ஐதராபாத்திற்கு காரில் உறவினரின் வளைகாப்புக்கு நிகழ்ச்சிக்காக சென்றனர். பிறகு அதே காரில் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டனர். காரை நாகராஜ் ஓட்டினார்.

திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலை அழகானந்தல் பகுதியில் செல்லும்போது நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News