செய்திகள்
காரில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபர் கைது
காரில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் தலைமையிலான போலீசார் கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் காருக்குள் 13 மூட்டைகள் இருந்தன. போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது மணல் இருந்தது தெரியவந்தது. அனுமதியின்றி முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் அள்ளி காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் மணல் கடத்தி வந்த குள்ளப்பகவுண்டன்பட்டி பங்களாமேடு தெருவை சேர்ந்த தட்சிஅழகன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.