செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2020-07-28 12:25 GMT   |   Update On 2020-07-28 12:25 GMT
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை போலீசார் நேற்று அவதானப்பட்டி சிறுவர் பூங்காவின் பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த புலுகன்கொட்டாய் கோவிந்தராஜ் (வயது 24), திம்மராயன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் பேரிகை போலீசார், சீக்கனப்பள்ளி வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய பீமனப்பள்ளி உதயா(24), சீனிவாசா(28), அலசப்பள்ளி மல்லேஷ்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News