செய்திகள்
திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் அரசு மருத்துவமனையில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு நகராட்சி சார்பில் 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.