செய்திகள்
வழக்கு பதிவு

பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

Published On 2020-07-27 12:38 GMT   |   Update On 2020-07-27 12:38 GMT
கெங்கவல்லி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புத்தூர் ஊராட்சி பகுதியில் ஏரிக்கரை ஓரமாக பணம் வைத்து சூதாடுவதாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு ஆணையம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த மணியரசு, சந்தோஷ், துரைராஜ் உட்பட 5 பேர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News