செய்திகள்
ஆளுநர் மாளிகை முற்றுகை- கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் கைது
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க. வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க. வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.