செய்திகள்
கோப்புபடம்

மணல் கடத்திய 3 பேர் கைது - லாரி, மோட்டார்சைக்கிள் பறிமுதல்

Published On 2020-07-26 12:55 GMT   |   Update On 2020-07-26 12:55 GMT
கும்பகோணத்தை அடுத்த அரியதிடல் பகுதியில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லாரி, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த அரியதிடல் பகுதியில் மணல் கடத்துவதாக பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் லாரி உரிமையாளர் சுவாமிமலையை சேர்ந்த பாலதண்டாயுதபாணி (வயது 42), லாரி டிரைவர் காளிதாஸ் (55), ஆனந்தகிருஷ்ணன் (52) ஆகியோர் என்பதும், அவர்கள் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News