செய்திகள்
விபத்து பலி

கரூர் அருகே லாரி மோதி டெய்லர் பலி

Published On 2020-07-26 12:17 GMT   |   Update On 2020-07-26 12:17 GMT
கரூர் அருகே லாரி மோதி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:

அரியலூர் மாவட்டம், தளவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று சதீஷ்குமார், தனது மனைவியின் தங்கை கனிமொழி (22) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, அரியலூரில் இருந்து திருப்பூருக்கு கரூர் மாவட்டம், க.பரமத்தி வழியாக சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி முத்துசோலிப்பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். கனிமொழி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News