செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-07-24 08:07 GMT   |   Update On 2020-07-24 08:07 GMT
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News