செய்திகள்
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை- எல்.முருகன்
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை.
முருகப்பெருமானை இழிவுபடுத்தியவர்களை பலர் கண்டிக்காதது ஏன்? கறுப்பர் கூட்டத்தின் மீது தமிழக அரசு மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பர் கூட்டத்திற்கு பின்புலமாக இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகப்பெருமானை இழிவுப்படுத்தியவர்களுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது. சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை.
முருகப்பெருமானை இழிவுபடுத்தியவர்களை பலர் கண்டிக்காதது ஏன்? கறுப்பர் கூட்டத்தின் மீது தமிழக அரசு மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பர் கூட்டத்திற்கு பின்புலமாக இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகப்பெருமானை இழிவுப்படுத்தியவர்களுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.