செய்திகள்
தற்கொலை

வெம்பக்கோட்டை அருகே மாணவர் தற்கொலை

Published On 2020-07-22 15:13 GMT   |   Update On 2020-07-22 15:13 GMT
வெம்பக்கோட்டை அருகே மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை தேவர்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் கருப்பசாமி பாண்டியன் (வயது 16). பிளஸ்-1 மாணவர். இந்தநிலையில் வீட்டில் ஆளில்லாதபோது தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News