செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமீன் கோரி மனு

Published On 2020-07-22 12:48 GMT   |   Update On 2020-07-22 12:48 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்
கோவில்பட்டி:

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  சிபிஐ காவல் நாளை மாலை உள்ள நிலையில் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானதால் முன்கூட்டியே நீதிமன்றத்தில் 3 காவலர்களை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள்  காவலர்கள் 3 பேருக்கும் ஆகஸ்ட் 5 தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரை ஆகஸ்ட் 5 தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், காவலர்கள் 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். காவலர் முருகன் தாக்கல் செய்த மனு, மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 


கொலை வழக்கில் கைதான தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை ஜுலை 24ல் நீதிமன்றம் விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
Tags:    

Similar News