செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி சத்யா (வயது 33). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். துரைராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இதில் மனம் உடைந்த சத்யா வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்யாவின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.