செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன்

சாத்தான்குளம் வழக்கு- 3 காவலர்களுக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவல்

Published On 2020-07-22 10:08 GMT   |   Update On 2020-07-22 10:38 GMT
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவில்பட்டி:

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிபிஐ காவல் நாளை மாலை உள்ள நிலையில் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதியானதால் முன்கூட்டியே நீதிமன்றத்தில் 3 காவலர்களை ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள்  காவலர்கள் 3 பேருக்கும் ஆகஸ்ட் 5 தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News