செய்திகள்
தற்கொலை

கெலமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-22 09:45 GMT   |   Update On 2020-07-22 09:45 GMT
கெலமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள தொட்டகானப்பள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வினோதா(26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகி 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக வினோதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு சென்ற சீனிவாசன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு வினோதா மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சீனிவாசன், தனது வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News