செய்திகள்
கைது

அரூர் அருகே மது பதுக்கி விற்ற 5 பேர் கைது

Published On 2020-07-22 08:34 GMT   |   Update On 2020-07-22 08:34 GMT
அரூர் அருகே மது பதுக்கி விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் குழுவினர் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற லட்சுமணன் (வயது 43), ராஜ்குமார் (25), திருப்பதி (30), ராஜேந்திரன் (47), மாது (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 149 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News