செய்திகள்
போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்

நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

Published On 2020-07-21 12:41 GMT   |   Update On 2020-07-21 12:41 GMT
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அருகே சக்திபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் பூபாலன் (வயது 27). என்ஜினீயர். இவரும், திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த சினேகா (21) என்ற பட்டதாரி பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். 

போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
Tags:    

Similar News