செய்திகள்
வடமதுரை பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது
வடமதுரை பகுதிகளில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கம்பிளியம்பட்டி ஏர்வாடி குளம் அருகே மது விற்ற கணேசன் (வயது 42), அய்யலூர் எஸ்.கே.நகரில் மது விற்ற குளத்துப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி(40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.